
இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!
வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் மேலும் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.