ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளுக்காக புதிய திகதிகளை வழங்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளுக்காக புதிய திகதிகளை வழங்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரணைகளுக்காகவும் புதிய திகதிகளை வழங்குதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இன்று (16) முற்பகல் வேளையில் உயர் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது தொடர்பில் ஆராயப்பட்ட போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது