நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..!

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..!

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 704 கொரோனா தொற்றாளர்களில் 541 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த பலர் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளிலேயே அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார்.