கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 171 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,495ஆக அதிகரித்துள்ளது.