
வெளிநாடுகளில் உள்ள 9,800க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் எடுத்த நடவடிக்கை
மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தெற்கு ஐரோப்பாவிலிருந்து 9,800 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தம்மை நாட்டுக்கு திருப்பி அழைக்குமாறு வெளிவிவகார அமைச்சின் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை கொவிட் 19 தொற்றுநோய் ஆரம்பித்ததிலிருந்து கிட்டத்தட்ட 40,000 இலங்கையர்களை வெளிநாடுகளில் இருந்து அரசாங்கம் திருப்பி அழைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
மேலும், தற்போதைய சூழ்நிலை காரணமாக வேலை இழந்தவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு தேடுவதற்காக ஜோர்டான், கட்டர் போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து இலங்கையரை மீள அழைக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.