ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது ஜனன தினம் இன்று..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது ஜனன தினம் இன்று..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது ஜனன தினம் இன்றாகும்.

 

1949 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் திகதி பிறந்த அவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்றவராவார்.

 

1971 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டதுடன், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கற்கை தொடர்பான பட்டம் பெற்றார்.

 

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற உயர் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளதுடன், யுத்தத்தில் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக ரண விக்ரம மற்றும் ரணசூர முதலான பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

 

1991 ஆம் ஆண்டு லெப்டினன் கேணலாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப நெறியை கற்று, அமெரிக்காவுக்கு சென்ற அவர் கலிபோர்னியா லொயெலா சட்ட பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பதுறையில் பணியாற்றினார்.

 

2005 ஆம் ஆண்டு தமது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியானதன் பின்னர், நாட்டின் பாதுகாப்பு செயலாளராக பணியை ஆரம்பித்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றினார்.

 

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட அவர், நாட்டின் 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.