
15 நாட்களுக்குள் 37 கொவிட் 19 மரணங்கள் சம்பவித்துள்ளன..!
நாட்டில் கொவிட் 19 தொற்றினால் இதுவரை 48 பேர் மரணித்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் சம்பவித்த கொவிட்-19 மரணங்களில் அதிகமானவை கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன.
அவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு நோயினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தங்களது வீடுகளிலேயே உயிரிழந்தனர்
இதற்கமைய, மாதத்தின் 15 நாட்களுக்குள் 37 கொவிட் 19 மரணங்கள் சம்பவித்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரையான காலப்பகுதியில் 17 பேர் உயிரிழந்தனர்.
வீட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாரடப்பினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.