வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலொன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்த பருவப்பெயர்ச்சி மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த நிலையில், இவ்வாறான அனர்த்தம் தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடலாக இடம் பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இ.இலிங்கேஸ்வரகுமார் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.