மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை

மேல் மாகாணத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட போதிலும், அங்கிருந்து வெளியேறி ஏனைய மாவட்டங்களுக்கு செல்லும் நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்ததடை அமலில் இருக்கும் காலகட்டத்தில் ஒருவர் மேல் மாகாணத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்துக்குள் பிரவேசித்தால், அவர் 15 நாட்களுக்கு பின்னரே அங்கிருந்து வெளியேற முடியும்.