இலங்கையில் நேற்றுமட்டும் 445 பேருக்கு கொரோனா

இலங்கையில் நேற்றுமட்டும் 445 பேருக்கு கொரோனா

இன்றைய தினம் 445 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 9,937ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை உயிரிழப்பு 34 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.