யாழில் இடம்பெற்ற துயரம்! சுயநினைவிழந்த பேரன் - அதிர்ச்சியில் உயிர் துறந்த பேத்தியார்

யாழில் இடம்பெற்ற துயரம்! சுயநினைவிழந்த பேரன் - அதிர்ச்சியில் உயிர் துறந்த பேத்தியார்

யாழ் - உடுவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவரும் அவரது இறப்புச் செய்தி அறிந்த அவரது அம்மம்மாவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலையில் உடுவில் ஆலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சௌந்தர்ராஜன் சகிதரன்(30), அவரது அம்மம்மா மாணிக்கம் நாகேஸ்வரன்(70) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

இளம் குடும்பத்தலைவரான அவரது பேரனை - மனைவி இன்று அதிகாலை தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார். இதன் போது அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை அறிந்து பேத்தியாரிடம் கூறியுள்ளார். பின் பேத்தியார் திருநீறு பூசியுள்ளார்.

உடனடியாகவே யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

அந்தச் செய்தியை அறிந்த அதிர்ச்சியில் பேத்தியாரும் மயங்கிச் சரிந்துள்ளார். பின் அவரும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலங்கள் உடகூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த இளம் குடும்பத்தலைவர் ஆவா வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.