இறுதியாக உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை- சுகாதார அமைச்சு அறிவிப்பு

இறுதியாக உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை- சுகாதார அமைச்சு அறிவிப்பு

நேற்று முன்தினம் (31) பானதுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 27 வயதுடைய நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகவில்லை என உறுதியாகியுள்ளது.

அதன்படி, குறித்த 27 வயது இளைஞனின் மரணத்தை 22ஆவது கொரோனா மரணமாக கருத முடியாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 என்று தேசிய தொற்று நோயியல் பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையிலேயே தற்போது சுகாதார அமைச்சு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.