ஊடகத்துறை அமைச்சின் நிறைவேற்றுதர அதிகாரிகளுக்கு கொரோனா

ஊடகத்துறை அமைச்சின் நிறைவேற்றுதர அதிகாரிகளுக்கு கொரோனா

ஊடகத் துறை அமைச்சின் நிறைவேற்று தர அதிகாரிகள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கொவிட் 19 ஐ தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படிஊடகத் துறை அமைச்சின்  அலுவலக அதிகாரிகள் இருவர் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின்  அதிகாரிகள் இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்அவர்களுடன் தொடர்புடைய முதற்கட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளைஅரசாங்க தகவல் திணைக்களத்தின் செயற்பாடுகளில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படிஅரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைமுல்லைதீவில் நேற்று முன்தினம் அடையாளங் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் தொடர்புடைய 15 தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்முல்லைதீவில் இதுவரை இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.

இதன்படிகுறித்த இருவரும் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றுவந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.