டக்ளஸ் தேவானந்தாவுக்கு மஹிந்தவால் வழங்கப்பட்ட மற்றுமொரு புதிய பதவி

டக்ளஸ் தேவானந்தாவுக்கு மஹிந்தவால் வழங்கப்பட்ட மற்றுமொரு புதிய பதவி

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், ஆகியோரினால் நியமிக்கப்படும் தலா ஒருவர் என இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் குறித்த நாடாளுமன்ற பேரவையில் ஐவர் அங்கம் வகிப்பார்கள்.

அதனடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும்.

19 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து உறுப்பினர்களை கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக தற்போது நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.