ஆனையிறவில் கோர விபத்து -முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் மகனும் பலி

ஆனையிறவில் கோர விபத்து -முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் மகனும் பலி

ஆனையிறவு பகுதியில்இரவு இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றிரவு 7 மணிக்கு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இராதாகிருஸ்ணன் மீனாம்பாள் ( 58 வயது) மற்றும் அவரது மகனான இராதாகிருஸ்ணன் கிருபாகரன் ( 21 வயது) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

முச்சக்கரவண்டியும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பவுசரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.