
யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேற்படி மூவரும் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள். தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விடத்தல்பளை தனிமைப்படுத்தலில் உள்ள தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 243 பேருக்கான கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
எனவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.