நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,784ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,784ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,784ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் புதிதாக 263 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை உயிர்ந்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 36 பேர் தனிமைப்படுத்தில் இருந்தவர்கள் என்பதோடு, ஏனைய 227 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.