சடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞன்...!

சடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞன்...!

கிளிநொச்சி-தர்மபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தர்மபுரம் பகுதியை சேர்ந்த 18 வயதான பாடசாலை மாணவன் என கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.