யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் தப்பியோட்டம் - மடக்கிப் பிடித்தவர்களுக்கு நேர்ந்த கதி

யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் தப்பியோட்டம் - மடக்கிப் பிடித்தவர்களுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் மாலை தப்பியோடிய நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் தப்பியோடிய நபரை பிடித்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார துறையினரும் பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் தென்னிலங்கையைச் சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் அண்மையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் திடீர் சுகயீனம் காரணமாக மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒருவர் இன்று மாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அவர் மது அருந்தும் நோக்கில் தப்பி சென்ற நிலையில் அப்பகுதி மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

எனினும் தப்பி ஓடிய நபரை மடக்கிப் பிடித்த ஊர் மக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பினை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.