இலங்கை சிறந்த அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றமடையும்-பிரதமர்
2030ஆம் ஆண்டளவில் சிறந்த அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கை மாற்றமடையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.