
அதிகரிக்கும் கொரோனா! அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
நாடு முழுவதும் கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சமூக பொறுப்போடு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேலியகொடை மீன் சந்தைப் பகுதியில் (20) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் நேற்று (21) பேலியாகொடை மீன் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினரின் புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தி வருகின்ற சூழலில், மக்களின் அன்றாட உணவுத் தேவைகனை நிவர்த்தி செய்வதற்கு நாடு முழுவதுமுள்ள கடற்றொழில்சார் நடவடிக்கைகள் தொடர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றதென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைவரையும் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதுடன் சமூக இடைவெளிகளை பேணி தொழில் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.