கோட்டை பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் மீளவும் வழமைக்கு

கோட்டை பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் மீளவும் வழமைக்கு

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் கடமைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை கடுமையான முறையில் பின்பற்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோட்டை பொலிஸ் நிலையத்தின் மேல் மாகாண விசேட பிரிவில் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.