சட்டவிரோத மது உற்பத்தியில் ஈடுபட்ட சீனர்கள்...!

சட்டவிரோத மது உற்பத்தியில் ஈடுபட்ட சீனர்கள்...!

கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் சட்டவிரோதமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று காவல் துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதோடு  இரு சீன பெண்கள் உள்ளிட்ட சீன நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்கள் மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குற்றத்தை ஏற்றுக்கொண்ட சீனப்பெண் ஒருவருக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றத்தை ஏற்றுக்கொள்ளாத ஏனைய இருவருககும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து லட்சம் ரூபாய் சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லவும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது