
ரிஷாட் பதியுதீனை தங்கவைத்த வீட்டு உரிமையாளரும் கைது
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட தெஹிவளை குடியிருப்புத் தொகுதியிலுள்ள சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 6 நாட்களாக காவல்துறையினரிடமிருந்து தலைமறைவாகியிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.