மூடப்பட்டது கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி?
கொழும்பு துறைமுகத்தின் Dock yard பகுதியில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் Dock yard பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பகுதிக்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதியில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.