ரிசாட் பதியுதீனின் மெய்பாதுகாப்பு காவல் துறை உத்தியோகத்தர் கைது...!

ரிசாட் பதியுதீனின் மெய்பாதுகாப்பு காவல் துறை உத்தியோகத்தர் கைது...!

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் மெய்பாதுகாவலராக செயற்பட்ட காவல் துறை உத்தியோத்தர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன் அவருக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் இரண்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்டுள்ள குறித்த வாகனங்களிலிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், நான்கு மெகசின்கள், 48 ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.