ருஹூணு பல்கலைக்கழக மாணவரின் தந்தைக்கும் கொரோனா தொற்று

ருஹூணு பல்கலைக்கழக மாணவரின் தந்தைக்கும் கொரோனா தொற்று

மாத்தறை-வெல்லமடம பிரதேசத்தில் அமைந்துள்ள ருஹூணு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவனும் அவருடன் தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த இன்னொரு மாணவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கான PCR பரிசோதனைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.