வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்!
வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினை கருத்திற்கொண்டு உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேனவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும் வவுனியா மாவட்டத்தில் தனியார் வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.