வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளை இலக்குவைத்து புதிய திட்டம்..!

வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளை இலக்குவைத்து புதிய திட்டம்..!

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திறமை சான்றிதலை வைத்துள்ள நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு வழிநடத்து நடைமுறையொன்றை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த புதிய திட்டத்தின் ஊடாக நாட்டுக்கும், வெளிநாட்டில் தொழில் புரியும் தொழிலாளர்களு;கும் பாரிய நன்மைகள் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ரிதியில் திறமையான தொழிலாளர்களுக்கு உள்ள தேவை அதிகரித்துள்ளதாகவும், இதனால் திறமையானவர்களை கொண்டு இந்த வாய்பை பயன்படுத்திக்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர் தேவையை அடிப்படையாக கொண்டு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து, ருமேனியா போன்ற நாடுகளின் வேலைக்கான வாய்ப்புகள் தற்போது இலங்கைக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், ஆகையினால் பொருத்தமான தொழிலாளர் தொகுதியை  உருவாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை, பட்டதாரிகளுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.