நாடு முழுவதும் திருவிழாக்கள், ஒன்றுகூடல்களுக்கு தடை – சுகாதார அமைச்சு

நாடு முழுவதும் திருவிழாக்கள், ஒன்றுகூடல்களுக்கு தடை – சுகாதார அமைச்சு

மறு அறிவித்தல் வரும் வரை மாநாடுகள், திருவிழாக்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், அணிவகுப்புகள் மற்றும் அத்தியாவசியமற்ற வகையில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ்.சிறிதரன் அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் நிலையை கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.