திவுலபிடிய பகுதியில் உள்ள 2 ஆயிரம் பேருக்கு PCR பரிசோதனை

திவுலபிடிய பகுதியில் உள்ள 2 ஆயிரம் பேருக்கு PCR பரிசோதனை

திவுலபிடிய பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 2 ஆயிரம் பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி , இவ்வாறு PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தியவர்களில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியானவர்கள் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலையின் ஏனைய ஊழியர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.