
வீட்டில் புதைகப்பட்ட பெண் சிசுவின் சடலம் மீட்பு
மாவனல்ல பகுதியில் வீட்டின் பின்புறத்தில் இருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி, டங்கொல்ல பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரின் இரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கண்டி பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி மாவனல்ல பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் தனக்கு குழந்தை பிறந்தது. அந்த நேரத்தில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகவும், எனவே அவரது தந்தை மற்றும் பாட்டி அதை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி மத சடங்குகளை செய்த பின்னர் வீட்டின் முற்றத்தில் புதைத்ததாகவும் குழந்தை பிரசவித்த பெண் தெரிவித்துள்ளார்.
மாவனெல்ல பதில் நீதவான் முன்னிலையில் குழந்தை சடலம் தோண்டி எடுக்கப்பட்ட பின்னர், மாவனெல்ல மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
சந்தேக நபர் தற்போது கண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.