
அடுத்த ஆண்டு அரச ஊழியர் சம்பள உயர்வு ...! ஜனாதிபதியின் அறிவிப்பு
நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று (05) நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் (SASA) 41 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், அரச சேவையை வலுப்படுத்தும் வகையில், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு சம்பள உயர்வு வழங்குவதற்காக ரூ. 11,000 கோடி ஒதுக்கப்படும்.
அந்தவகையில், 2027 ஆம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ரூ. 11,000 கோடி ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
செயல் திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும், இதற்காக அரச நிர்வாக அதிகாரிகளின் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் அநுரகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.
குடிமக்கள் மீதான அரச அதிகாரிகளின் பொறுப்பை சுற்றறிக்கைகள் அல்லது கட்டளைகளால் கட்டுப்படுத்த முடியாது என்றும் குடிமக்கள் விரும்பும் நாட்டை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
மேலும், சிதைவடைந்த அரசை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.