மஹிந்தவைக்கான கால்டன் இல்லத்துக்கு படையெடுக்கும் மக்கள்

மஹிந்தவைக்கான கால்டன் இல்லத்துக்கு படையெடுக்கும் மக்கள்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நாளை மறு தினம் பதவியேற்க உள்ளார்.

இதையடுத்து நாடெங்கிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அதிகளவான பொதுமக்கள் தங்காலை கால்டன் இல்லத்துக்கு சென்றுள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதேசத்தில் உள்ள பௌத்த பிக்குகள் பிரதமர் மற்றும் நாமலுக்கு பிரித் நூல் அணிவித்துள்ளனர்.