இன்றும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு

இன்றும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு

யாழ்ப்பாணம் - கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி வடக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுள்ளது.

அண்மைக் காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையிலேயே கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்மை குறிப்பிடத்தக்கது.