விழிப்புணர்வு கட்டுரை | ரம்புட்டான் வாங்கும் முன் இதையும் தெரிந்து கொள்ளுங்கள்
இன்று 100 ரூபாய்க்கு 20 அல்லது 15 என விற்பனை செய்யப்படும் பேருந்துகளிலும், பழக்கடைகளிலும் அலங்கரித்து விற்கப்படும் இலங்கைக்கே உரிய பழமான ரம்புட்டான் பற்றி ஒரு திடுக்கிடும் உண்மையைச் சொல்லப் போகிறேன். இது நான் என் கண்களால் கண்ட காட்சி.
நாம் சாப்பிடும் ரம்புட்டான் பழம், மரத்தில் இருந்து பறிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் வரை சுகாதாரமான பழமாகவே உள்ளது. ஆனால், விற்பனைக்கு சில நயவஞ்சகர்களின் கைகளுக்கு மாறியதும் அது விஷப் பொருளாக மாறுகிறது.
எப்படி என்றால், ரம்புட்டான் வெயிலால் காயும் போது அதற்கு சுகாதாரமற்ற நீர் ஊற்றப்படுகிறது. அதையும் விட ஒரு படி மேலே சென்று, குளுக்கோஸ் நீருடன் கலந்து தெளிக்கப்படுகிறது.
இது ஏன்? வெறும் வியாபாரத்திற்காகவா? மக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல், அவர்கள் சாப்பிடும் உணவின் பாதுகாப்பைப் பற்றிய எந்த உத்தரவாதமும் இல்லாத இத்தகைய செயல்கள் ஏன் நடைபெறுகின்றன?
இந்த விடயத்தை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள். ரம்புட்டான் வாங்கும் போது அதை கையில் எடுத்து நுகர்ந்து பார்த்து வாங்குங்கள்.
உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்.