யாழில். கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவர் உயிரிழப்பு

யாழில். கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்கு சென்று மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார்.அதனை அடுத்து அவரை  வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.