நாட்டில் பதிவான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்.. நாடாளுமன்றில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் பதிவான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்.. நாடாளுமன்றில் வெளியான அதிர்ச்சி தகவல்

2024.09.21 முதல் 2025.05.07 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 79 துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாட்டில் பதிவான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நாடாளுமன்றில் வெளியான அதிர்ச்சி தகவல் | Shooting Incidents Reported In The Country

நாடாளுமன்றத்தில் நேற்று (9) நடைபெற்ற அமர்வின்போது சமூக கட்டமைப்பில் நாளாந்தம் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து  முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்; பாதாளக் குழுக்களின் செயற்பாடு மற்றும் அவர்களை உருவாக்கியவர்கள், போசித்தவர்கள் குறித்து அனைவரும் நன்கு அறிவார்கள்.

பாதாளக் குழுக்களின் செயற்பாட்டை இல்லாதொழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்டுள்ளது.

2024.09.21 முதல் 2025.05.07 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 79 துப்பாக்கிப் பிரயோகத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். திட்டமிட்ட பாதாள குழுக்களுடன் தொடர்புடைய 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டபவர்கள் மற்றும் கைது செய்யப்படாதவர்களின் விபரங்களை வெளியிட முடியாது.

போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே துப்பாக்கிசூட்டு பிரயோகம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

ஏனெனில் கடந்த காலங்களில் இதனை காட்டிலும் பல படுகொலைகள் இடம்பெற்றன. இராணுவத்தில் இருந்து இடைவிலகியவர்கள் பாதாள குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.