இலங்கை மத்திய வங்கி அதிரடி உத்தரவு
ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்துப் பொருட்களின் ஏற்றுமதியாளர்களும், அந்த வருமானத்தில் எஞ்சிய தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்கு முன்பதாகவோ அல்லது அன்றைய தினத்திற்குள்ளோ கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குக் கிடைத்த ஏற்றுமதி வருமானத்தை, மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் பயன்படுத்திய பின்னர், எஞ்சியிருக்கும் தொகையையே இவ்வாறு உள்நாட்டு நாணயமான இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.