
யாழ்ப்பாணத்தில் கூரை உடைத்து புகுந்த திருடர்கள் - பெருமளவு நகைகள் கொள்ளை..!
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதியில் 36 இலட்சம் ரூபாய் பெறுமதியான 22 பவுண் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
நயினாதீவு ஐந்தாம் வட்டார பகுதியில் நேற்றிரவு(13) இரண்டு பெண்கள் வசித்துவரும் வீட்டில் அவர்கள் உறக்கத்தில் இருந்த போது வீட்டுக் கூரையை உடைத்து வீட்டில் இறங்கிய திருடர்கள் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 22 பவுண் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
காலை வீட்டினுடைய அறையை திறந்து பார்த்தபோது கைப்பை காணாமல் இருந்தமையால் அதிலிருந்து நகைகள் கைப்பையுடன் கொள்ளையடிக்கப்பட்டமை தெரிய வந்தநிலையில், ஊர்காவற்றுறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தடயவியல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.