துறைமுகநகர சட்டமூலம் தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு!
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற வியாக்கியானம் நேற்று(05) புதன்கிழமை கிடைக்கப் பெற்றதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதனை எதிர்வரும் 18 ஆம்திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.