446 கிலோகிராம் வல்லப்பட்டை தூளுடன் ஒருவர் கைது
வல்லப்பட்டை தூள் என சந்தேகிக்கப்படும் 446 கிலோவுடன் சந்தேக நபர் ஒருவர் வெலிகம-கபுவத்த பிரதேசத்தில் வைத்து காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது, கண்டுபிடிக்கப்பட்ட கொதிகலன், சூடான நீர் கொள்கலன், பீப்பாய்கள் உள்ளிட்ட பல பொருட்களை அகுருஸ்ஸ வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலிகம-தெணிபிடிய பிரசேத்தில் வசித்து வரும் 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.