சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் நிலை அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை நேற்று பிற்பகல் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி தர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.