கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு
கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் இதுவரையில் மூவாயிரத்து 281 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அதேநேரம், நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 198 ஆக குறைவடைந்துள்ளது