சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய நபர் ஒருவர் கைது..!
பத்து வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டவர் 41 வயதான பெரியகுளம் பகுதியை சேர்ந்த நபர் என கூறப்பட்டுள்ளது.
புத்தளம் பகுதியில் 10 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குறித்த நபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.