மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு!
எரிபொருள் விலை உயர்வுக்கு இணையாக, நாட்டில் உள்ள சில மதுபான நிறுவனங்களும் மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளன.
அதன்படி, நாட்டில் அதிகம் விற்பனையாகும் மதுபானமான அதி விசேஷம் 750 மில்லி லீற்றர் போத்தலின் விலை 20 ரூபாவாலும் அதன் அரை போத்தலின் விலை ரூ. 10-ம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏனையவற்றின் விலை
மேலும், ஒரு போத்தல் “ஓல்ட்” அரக்கின் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு போத்தல் விஸ்கி மற்றும் பிராந்தியின் விலை ரூ. 100 உயர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும், பீர் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.