15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை

15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 15ஆக நிர்ணயித்து ஐக்கிய அரபு இராச்சியம் வியாழக்கிழமை ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது. 

இத்தகையதொரு நடவடிக்கையை அறிமுகப்படுத்திய முதல் அரபு நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் இடம்பிடித்துள்ளது. 

இந்தத் தீர்மானம் காரணமாக, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தனிப்பட்ட சமூக வலைத்தளக் கணக்குகளை உருவாக்குவதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்வதுடன், அந்தத் தளங்களின் முழுமையான அம்சங்களை அவர்கள் அணுகுவதையும் கட்டுப்படுத்துகிறது.