போராட்டத்தில் கலந்துகொள்ளாத அரச உத்தியோகத்தருக்கு அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்!
நாட்டில் சம்பள உயர்வை வலியுறுத்தி அரச ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் கலந்துகொள்ளாது கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்று தரம் அல்லாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா ஒரு தடவை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை இன்றையதினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.