கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நாட்டில் நிலவும்  சீரற்ற காலநிலை தொடர்பில்  கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்பிட்டி முதல் கொழும்பு வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையில் கடற்கரைப் பகுதியில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.சீரற்ற காலநிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.