கொவிட் தொற்றால் மேலும் 19 பேர் மரணம்!

கொவிட் தொற்றால் மேலும் 19 பேர் மரணம்!

நாட்டில் மேலும் 19 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (1) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15, 492 ஆக அதிகரித்துள்ளது.